மேலும் செய்திகள்
கருட சேவை உற்சவம்
07-Jul-2025
வில்லியனுார் : வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் 21ம் ஆண்டு பிரமோற்சவ விழாவையொட்டி விடையாற்றி உற்சவம் நேற்று நடந்தது.வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் 21ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 14 நாட்கள் நடந்த விழாவில், காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடந்து வந்தது.பிரமோற்சவத்தில் முக்கிய விழாவாக கடந்த 6ம் தேதி பல்லக்கு மோஹநாவதாரம், அன்று மாலை கருடசேவை நிகழ்ச்சியும், 7ம் தேதி யானை வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சியும், 8ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 10ம் தேதி தேர் திருவிழா நடந்தது. 11ம் தேதி மட்டையடி உற்சவமும், 12ம் தேதி புஷ்ப பல்லக்கு வீதியுலாவும் நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.நேற்று மாலை விடையாற்றி உற்சவம் நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடந்தது. மாலை விடையாற்றி உற்சவமும் தொடர்ந்து சுவாமி உள்புறப்பாடு நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சந்தானராமன் செய்திருந்தார்.
07-Jul-2025