உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடல் அலையில் சிக்கி மீனவர் பலி

கடல் அலையில் சிக்கி மீனவர் பலி

புதுச்சேரி: கடல் அலையில் சிக்கி மீனவர் இறந்தார்.முத்தியால்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 48; மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் சுரேஷ் இரு தினங்களுக்கு முன், மீன்பிடிக்க செல்வதாக தம்பியிடம் கூறிவிட்டு சென்றார். பின் நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில் இறந்த நிலையில் அவரது உடல் சோலை நகர் யூத் விடுதி கடற்கரையோரம் ஒதுங்கியது. புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை