உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீனவர் தற்கொலை; போலீசார் விசாரணை

மீனவர் தற்கொலை; போலீசார் விசாரணை

காரைக்கால்: காரைக்கால், கோட்டுச்சேரி காளிக்குப்பம், சுனாமி நகரை சேர்ந்தவர் ராஜவேல், 47; மீனவர். இவர் சரியாக வேலைக்கு செல்வதில்லை. அளவுக்கு அதிகமாக மது அருந்துவது வழக்கம். இதனால் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்று முன்தினம் அவரது மனைவியிடம் ராஜவேல் மது அருந்துவதற்கு பணம் கேட்ட போது, அவர் கொடுக்க மறுத்தார். இதில், விரக்தியடைந்த ராஜவேல், மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி