உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மண்ணாடிப்பட்டு கொம்யூனில் 15ம் தேதி கிராம சபை கூட்டம்

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் 15ம் தேதி கிராம சபை கூட்டம்

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கொம்யூனில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் வரும் 15ம் தேதி நடக்கிறது. ஆணையர் எழில்ராஜன் செய்திக்குறிப்பு: உள்ளாட்சித்துறை அறிவுறுத்தலின்படி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயதுக்குட்பட்ட 18 கிராம பஞ்சாயத்துகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 15ம் தேதி காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை கிராம சபை கூட்டம் நடக்கிறது. அதன்படி, திருவாண்டார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, திருபுவனை கொம்யூன் அலுவலகம், சன்னியாசிக் குப்பம், கலிதீர்த்தாள்குப்பம் (மேற்கு), மதகடிப்பட்டு, பி.எஸ்.பாளையம், செல்லிப்பட்டு, சோரப்பட்டு கிராம பஞ்சாயத்து அலுவலகத்திலம், மதகடிப்பட்டு பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, கலிதீர்த்தாள்குப்பம் (கிழக்கு) திரவுபதியம்மன் கோவில் திடல், மண்ணாடிப்பட்டு ஜவஹர் பவன், மணலிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி, கூனிச்சம்பட்டு நாடக மேடை, திருக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளி, கைக்கிலப்பட்டு அரசு தொடக்கப் பள்ளி, தேத்தாம்பாக்கம் சமுதாய நலக்கூடம், சந்தை புதுக்குப்பம் சமுதாய நலக்கூடம், காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில், பொதுமக்கள் பங்கேற்று கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளை, முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை