| ADDED : நவ 27, 2025 04:32 AM
புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக மண்டல இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு; ஒருங்கிணைந்த விழிப்புணர்வு மற்றும் குறைதீர்வு முகாம், இன்று புதுச்சேரி, கூடப்பாக்கம் வாய்க்கால் தெருவில் உள்ள சன்பீம் ஜெனரேட்டார் நிறுவனத்தில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. காரைக்கால் கோவில்பத்து, எப்.சி.ஐ., சாலை, ஜிப்மரில், காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடக்கிறது. முகாமில், தொழிலாளர்கள், பயனாளிகள், தொழில் முனைவோர்கள் இ.எஸ்.ஐ., மற்றும் இ.பி.எப்., குறித்த கோரிக்கைகளை தெரிவிக்கலாம். கோரிக்கைகள், உடனே பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணப்படும்.