உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பென்ஷன் பெறுவதற்கான ஆணை வழங்கல்

பென்ஷன் பெறுவதற்கான ஆணை வழங்கல்

புதுச்சேரி: உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு பென்ஷன் பெறுவதற்கான ஆணையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வழங்கினார்.புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பட்டுத் துறையின் மூலம் உப்பளம் தொகுதியை சேர்ந்த முதியோர், விதவைகள், முதிர்கன்னி, திருநங்கைகள் ஆகியோர் மாதந்தோறும் பென்ஷன் பெறுவதற்கான ஆணை வழங்கும் விழா நடந்தது.அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 175 பயனாளிகளுக்கு பென்ஷன் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.துறை துணை இயக்குநர் அமுதா, தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ