உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காமாட்சி அம்மன் கோவிலில் 11ம் தேதி கிண்ணி தேர் வீதியுலா

காமாட்சி அம்மன் கோவிலில் 11ம் தேதி கிண்ணி தேர் வீதியுலா

புதுச்சேரி: புதுச்சேரி, காமாட்சி அம்மன் கோவிலில், சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அபிேஷக கிண்ணி தேர் ஆராதனை மகா உற்சவம் வரும் 11ம் தேதி நடக்கிறது.அன்று காலை 7:30 மணிக்கு 108 பால்குடம் மாட வீதி வழியாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, 8:00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு விசேஷ சந்தனகாப்பு அலங்காரம், தொடர்ந்து, காமாட்சி அம்மன் அலங்கரிக்கப்பட்ட கிண்ணி தேர் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி