உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சலவை தொழிலாளி தற்கொலை 

சலவை தொழிலாளி தற்கொலை 

புதுச்சேரி: மூலநோயால் அவதிப்பட்ட அயனிங் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.முதலியார்பேட்டை ஆண்டியார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் 52, சலவை தொழிலாளி. இவர் மூல நோயால் அவதிப்பட்டு வந்தார். அவ்வப்போது அரசு மருத்துவமனைக்கு சென்று மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வலி அதிகமாகவே நைலான் புடவையால் வீட்டில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை