மேலும் செய்திகள்
கோவில்களில் சிவபெருமானுக்கு அன்னாபிேஷகம்
5 hour(s) ago
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், நேற்று நடந்த அன்னாபிேஷக சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று, ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனையொட்டி, மாலை 3:30 மணிக்கு சாற்று முறை நடைபெற்று, 100 கிலோ அரிசி கொண்டு சமைக்கப்பட்ட அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகளை கொண்டு சித்தானந்த சுவாமி அலங்கரிக்கப்பட்டு மாலை 5:30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 7:30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 7:30 மணிக்கு அன்ன அலங்காரத்தை கலைத்து, சுவாமிக்கு பாலாபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
5 hour(s) ago