உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி அருகே மாணவர்களைஅச்சுறுத்தும் பட்டுப்போன மரம்

பள்ளி அருகே மாணவர்களைஅச்சுறுத்தும் பட்டுப்போன மரம்

நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லூர் அரசு துவக்கப்பள்ளி அருகே மாணவர்களை அச்சுறுத்தும் பட்டுப்போன மரத்தை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பண்டசோழநல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு அருகே அம்பேத்கர் சிலை பக்கத்தில் உள்ள பழமையான அரச மரம் இடி தாக்கி பட்டுப் போய் உள்ளது. இந்த மரம் எப்போது விழும் என்ற நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்களும், பொது மக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் பட்டுப்போன அரசமரத்தினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை