உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன் வியாபாரம் செய்யும் மகளிருக்கு குளிரூட்டும் பெட்டி வழங்கல்

மீன் வியாபாரம் செய்யும் மகளிருக்கு குளிரூட்டும் பெட்டி வழங்கல்

புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதி மீன் வியாபாரம் செய்யும் மகளிருக்கு குளிரூட்டும் பெட்டிகளை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், முத்தியால்பேட்டை, சோலை நகர் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரம் செய்யும் 150 மகளிருக்கு விலையில்லா குளிரூட்டும் பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., மீன் வியாபாரம் செய்யும் மகளிர்களுக்கு குளிரூட்டும் பெட்டிகளை வழங்கினார். மீனவர் நலத் துறை துணை இயக்குனர் மீரா சாகிப், ராஜேந்திரன், நல ஆய்வாளர்கள் அந்தோணி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை