உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பரிக்கல்பட்டு - புதுச்சேரி இடையே மீண்டும் பி.ஆர்.டி.சி., பஸ் சேவை

 பரிக்கல்பட்டு - புதுச்சேரி இடையே மீண்டும் பி.ஆர்.டி.சி., பஸ் சேவை

பாகூர்: பரிக்கல்பட்டு - புதுச்சேரி இடையே நிறுத்தப்பட்ட பி.ஆர்.டி.சி., பஸ் சேவையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., மீண்டும் துவக்கி வைத்தார். பாகூர் தொகுதி, பரிக்கல்பட்டு கிராமத்தில் இருந்து ஆராய்ச்சிக்குப்பம், பாகூர், வழியாக புதுச்சேரிக்கு 17ஏ என்ற பி.ஆர்.டி.சி., பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் பழுது மற்றும் விழுப்புரம் - நாகை புறவழிச் சாலை பணியால் பஸ் சேவை கடந்த நான்கு ஆண்டுகளாக தடைபட்டது. இதனால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதையடுத்து, பி.ஆர்.டி.சி., பஸ்சை மீண்டும் இயக்கிட செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில், பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், கொம்மந்தான்மேடு கிராம மக்கள் பயன்பெரும் வகையில், பாகூர் வரை தற்காலிக இலவச வாகன சேவை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், பரிக்கல்பட்டு - புதுச்சேரி இடையே மீண்டும் பி.ஆர்.டி.சி., பஸ் சேவை நேற்று துவங்கியது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., பஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ