உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரத்தில் கார்மோதி 4 பெண்கள் காயம்

மரத்தில் கார்மோதி 4 பெண்கள் காயம்

காரைக்கால் : காரைக்காலில் மரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த வளர்மதி, 33, காரைக்கால்மேடு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சக்திவேல் மனைவி வெண்ணிலா, 33, ஜெயபால் மனைவி ராஜவள்ளி, 47, சிவபெருமாள் மனைவி கனகவல்லி, 35 ஆகியோர் திருநாகேஸ்வரம் கோவிலுக்கு டி.என்.51.எப்.0135 என்ற டாடா இண்டிகா காரில் நேற்றுமுன்தினம் சென்றனர். காரை டிரைவர் அருள்தாஸ் ஓட்டினார். கார் நெடுங்காடு அருகே சென்றபோது, காருக்கு முன்னாள்மோட்டார் சைக்கிளில் சென்ற அன்புமணி, திடீரென வலது பக்கமாக திருப்பியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க, காரை இடது பக்கமாக திருப்பியுள்ளார்.அப்போது கார், மரத்தில்மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெடுங்காடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை