உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழில் முனைவோருக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் புதுச்சேரி

தொழில் முனைவோருக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் புதுச்சேரி

புதுச்சேரி: புத்தாக்க நிறுவனங்களுக்கு வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கு உகந்த சூழலை உருவாக்கித் தருவதில் முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள் பட்டியலில் புதுச்சேரி இடம் பெற்றுள்ளது.மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (டி.பி.ஐ.ஐ.டி) துறை இந்த தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என, தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், சந்தைப்படுத்துதலை எளிமையாக்குதல், நிதி ஆதரவு திட்டங்கள் உள்பட 25 காரணிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தர வரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.அதன்படி, 2022ம் ஆண்டுக்கான இந்த தர வரிசைப் பட்டியலை டில்லியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார்.

மிக சிறந்த மாநிலங்கள்

குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேசம்.

சிறந்த மாநிலங்கள்

மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, அருணாசலபிரதேசம், மேகாலயா.முதன்மை மாநிலங்கள்ஆந்திரா, அசாம், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், திரிபுரா.

ஆர்வம் காட்டும் மாநிலங்கள்

பீகார், அரியானா, அந்தமான்-நிகோபார் தீவுகள், நாகாலாந்து.

முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள்

'ஏ' பிரிவில் சத்தீஸ்கர், டில்லி, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்கள், 'பி' பிரிவில் சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக், மிசோரம், புதுச்சேரி, சிக்கிம் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி