மேலும் செய்திகள்
மத்திய பட்ஜெட் எதிரொலி; பங்குச்சந்தைகள் சரிவு
3 hour(s) ago | 3
தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை
3 hour(s) ago | 5
புதுச்சேரி : மத்திய அரசு வழங்கும் தேசிய இளையோர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. என்.எஸ்.எஸ்., மாநில இணைப்பு அலுவலர் ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிறப்பாகச் சமுகப் பணியாற்றும் இளைஞர் களுக்கும், சங்கங்களுக்கும் மத்திய அரசு ஆண்டு தோறும் விருது வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. மாநில, தேசிய அளவில் சிறப்பாகச் சமுகப்பணி ஆற்றியவர்களுக்கு நாடு முழுவதும் 25 விருதுகள் வழங்கப்பட உள் ளன. சமுகப்பணிக்கு ரூ. 40 ஆயிரம் வழங் கப்படும். சங்கங்களுக்கு தேசிய அளவில் ஒரு விருது வழங்கப்படும். விருது பெறும் சங்கத் திற்கு ரூ. 2 லட்சம் பரிசாக வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்குரிய விண் ணப்பத்தை புதுச்சேரி அண்ணா நகர், காமராஜர் கல்வி வளாகம், நான்காவது மாடியில் செயல்படும் என்.எஸ்.எஸ்., மாநில அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ, தபாலிலோ அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
3 hour(s) ago | 3
3 hour(s) ago | 5