உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம் துவக்கம்

ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம் துவக்கம்

புதுச்சேரி புதுச்சேரியில் ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புதுச்சேரி, சித்தன்குடி, ஜெயராம் கல்யாண மண்டபத்தில், வேதபாரதி சார்பில், ராதா மாதவ திருக்கல்யாண மகோற்வசம் நேற்று துவங்கியது. விழாவில் பெண், மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வேத பாராயணம் நடந்தது.காலை 10:30 மணிக்கு நாம சங்கீர்த்தனம், மாலை 4:30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், மகா மந்தர அகண்ட பாராயணம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு அஷ்டபதி, தரங்கம், பஞ்சபதி, கணேசாதி தியானம், பூஜை, திவ்ய நாமம் நடைபெற்றது. இன்று 12,ம் தேதி காலை 6:00 மணி முதல் மார்கழி மாத பஜனை, உஞ்சவ்ருத்தி, திவ்ய நாமம், அஷ்டபதி, ராதா மாதா திருக்கல்யாணம், ஆஞ்சநேயர் உற்சவம், மங்கள ஆரத்தி நடக்கிறது. விழாவில் கடையநல்லுார் ராஜகோபால்தாஸ் பாகவதர் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை