ஒ.என்.ஜி.சி., சார்பில் ரக்க்ஷாபந்தன்
காரைக்கால் : காரைக்கால் ஒ.என்.ஜி.சி.சார்பில் ரக்க்ஷா பந்தன் நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்கால் ஓஎன்ஜிசி அலுவலக வளாகம் சார்பில் நேற்று முன்தினம் ரக்க்ஷா பந்தன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி., காவேரி அசட் மேலாளர் உதய் பாஸ்வான் தலைமை தாங்கி, ரக்க்ஷா பந்தன் குறித்து அனைவரும் விரிவாக விளக்கினர் இதை தொடர்ந்து ஆண்களுக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டு ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்து, சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சப்போர்ட் மேலாளர் பிரசெஞ்சித் கோகாய்.சி.ஜி.எம்.,கிரிராஜ் திமன் மற்றும் சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.