உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரேஷன் கடை ஊழியர் தற்கொலை

ரேஷன் கடை ஊழியர் தற்கொலை

பாகூர்: பாகூர் அடுத்த சேலியமேடு பேட், புதுத்தெருவை சேர்ந்தவர் அருண்செல்வம் 42; கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர். இவருக்கு, சந்தியா என்ற மனைவியும், ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவருக்கு மது பழக்கம் இருந்து வந்ததால், உடல் நிலை பாதிக்கப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 15 நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாமல், மீண்டும் மது குடித்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். நேற்று முன்தினம் வீட்டில் அருண்செல்வம் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை