கலா உத்சவ் போட்டி மாணவர்கள் பங்கேற்பு
புதுச்சேரி: மாவட்ட அளவிலான நடந்த, கலா உத்சவ் போட்டியில், தனி நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், மாணவர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் சமகர சிக் ஷாவால், மாவட்ட அளவிலான, கலா உத்சவ் போட்டி, ஜவகர் பால் பவனில் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த போட்டியில், வாய்ப்பாட்டு, இசை, ஓவியம், கைவினை ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து, நேற்று (6ம் தேதி) தனி நடனம், குழு நடனம், கம்பி கருவிகள், தாள கருவி உள்ளிட்ட இசைக் கருவிகள் மீட்டல் ஆகிய போட்டிகள் நடந்தது. இன்று (7ம் தேதி) நாடகம், பாரம்பரிய கதை சொல்லல் ஆகிய போட்டிகள் நடக்கிறது.