| ADDED : ஜன 06, 2024 06:16 AM
புதுச்சேரி, : உழவர்கரை நகராட்சி சார்பில் நடக்கும் வீட்டு வரி, சொத்துவரி, சேவை வரி வசூல் சிறப்பு முகாமில் பங்கேற்று வரி மற்றும் நிலுவை வரியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.உழவர்கரை நகராட்சி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:உழவர்கரை நகராட்சி சார்பில், வரி செலுத்துவோரின் நலன் கருதி, நாளை( 7ம் தேதி) வெங்கட்டா நகரில் அமைந்துள்ள, தமிழ்ச்சங்கத்தில், சொத்து வரி மற்றும் சேவை வரி வசூல் சிறப்பு முகாம், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி காமராஜர் நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், பிருந்தாவனம், சாரம் மற்றும் இதர வார்டுகளில் உள்ள வரி நிலுவைதாரர்கள், 2023 - 24ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரியை செலுத்தலாம். மேலும் இன்று வி.வி.பி நகர் வீட்டு வரி வசூல் மையத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் முகாமில் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட, அனைத்து வார்டுகளில் உள்ளவர்கள், வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரர்கள், 2023-24ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு செலுத்தி, வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம் lgrams.py.gov.inஎனும் முகவரியில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.