உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெட்டப்பாக்கம் கோவிலில் நாளை அனுமன் ஜெயந்தி

நெட்டப்பாக்கம் கோவிலில் நாளை அனுமன் ஜெயந்தி

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது.நெட்டப்பாக்கம் கிராமத்தில் உள்ள ராமபத்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நாளை 11ம் தேதி வெகு விமர்சையாக நடக்கிறது. இதையொட்டி, அன்று காலை 10:15 மணியளவில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 108 லிட்டர் பால் அபிேஷகம், தொடர்ந்து வெள்ளிக் கவசம் சாற்றுதல், தீப ஆராதனை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு கற்பூர ஜோதி தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி