சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்
புதுச்சேரி: புதுச்சேரி, எல்லைப் பிள்ளை சாவடியில் உள்ள சாரதாம்பாள் கோவிலில் மார்கழி மாத மகோத்சவம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த 26 ம் தேதி முதல் தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமியினுடைய ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாசம் நடைபெற்று வருகிறது.அதில், மூன்றாம் நாளான நேற்று நாராயண நாமத்தின் உடைய பெருமை, நரசிங்க பெருமாள் அவதாரம் குறித்து விளக்கம் அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.