உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒட்டம்பாளையத்தில் நாளை குடிநீர் கட்

ஒட்டம்பாளையத்தில் நாளை குடிநீர் கட்

புதுச்சேரி : ஒட்டம்பாளையத்தில் நாளை மதியம் குடிநீர் வினியோகம் தடைபடும் என, பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிவிப்பு:புதுச்சேரி, ஒட்டம்பாளையம், கொம்பாக்கம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.இதனால் நாளை 23ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, கொம்பாக்கம், கொம்பாக்கம் பேட், பாப்பாஞ்சாவடி, ஒட்டம்பாளையம், காமராஜர் நகர், சிமெண்ட் களம், குப்பம் பேட் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை