உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

புதுச்சேரி: வேலை தொடர்பாக நேர்காணலுக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யநாராயணன், 33; இந்திய கடற்படையில் தற்காலிக ஊழியராக பணி செய்து வருகிறார். இவர் மற்றோரு தனியார் கம்பெனி வேலை தொடர்பாக நேர்காணலுக்கு செல்வதாக, கடந்த 13ம் தேதி அவரது மனைவிடம் கூறி விட்டு சென்றார்.அன்று மாலை வரை வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி, உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, சத்யநாராயணனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை