உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவி பெயரை பச்சை  குத்திய வாலிபர் போக்சோவில் கைது

மாணவி பெயரை பச்சை  குத்திய வாலிபர் போக்சோவில் கைது

கண்டமங்கலம்: மாணவியின் பெயரை மார்பில் பச்சைக் குத்திய வாலிபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.கண்டமங்கலம் அடுத்த நவமால்மருதுார் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் ஸ்ரீநாத், 20; இவருக்கும் 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவியின் பெயரை ஸ்ரீநாத் மார்பில் பச்சை குத்தி வைத்திருந்தார். இது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த மாணவியின் தந்தை தற்கொலைக்கு முயன்றார்.இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீசார் போக்சோ வழக்குப் பதிந்து, ஸ்ரீநாத்தை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை