மேலும் செய்திகள்
செஸ்: பிரக்ஞானந்தா அபாரம்
01-Dec-2025
லண்டன்: லண்டன் கிளாசிக் செஸ் 8வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.லண்டனில், கிளாசிக் செஸ் தொடர் நடக்கிறது. மொத்தம் 119 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா 20, பிரனவ் ஆனந்த் 19, உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.இதன் 8 வது சுற்று போட்டியில் பிரக்ஞானந்தா, ருமேனியாவின் டேவிட் கவ்ரிலெஸ்கு மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 46வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.இந்தியாவின் பிரனவ் ஆனந்த் (வெள்ளை), இங்கிலாந்தின் டேனியல் ஹோவார்டு பெர்னாண்டஸ் (கருப்பு) மோதிய மற்றொரு 8வது சுற்று போட்டி 37வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.எட்டு சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா, 6.5 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். பிரனவ் ஆனந்த், டேனியல் ஹோவார்டு உள்ளிட்டோர் தலா 6.0 புள்ளிகளுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
01-Dec-2025