மேலும் செய்திகள்
இந்திய அணி ஏமாற்றம் * ஆசிய டேபிள் டென்னிசில்...
13-Oct-2025
ரிபாகினா முன்னேற்றம்நிங்போ: சீனாவில் நடக்கும் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., நிங்போ ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினியை வீழ்த்தினார்.தென் ஆப்ரிக்கா அபாரம்இஸ்மாயிலியா: எகிப்தில் நடக்கும் ஆப்ரிக்க கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 8-3 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தியது. 13 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த தென் ஆப்ரிக்கா பைனலுக்கு முன்னேறியது. இதில் எகிப்தை சந்திக்கிறது.பிரேசில் பிரமாதம்ரபாட்: மொராக்கோவில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியை வீழ்த்தியது.ஜெர்மனி ஜெயம்ஜடார்: குரோஷியாவில், ஐரோப்பிய அணிகளுக்கான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் காலிறுதியில் ஜெர்மனி அணி 3-1 என, குரோஷியாவை வென்றது. மற்றொரு காலிறுதியில் பிரான்ஸ் அணி 3-0 என பெல்ஜியத்தை வென்றது.எக்ஸ்டிராஸ்* ஏதென்சில் நடக்கும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் 'டிராப்' பிரிவில் இந்திய வீரர் ஜோராவர் சிங் சாந்து வெண்கலம் வென்றார்.* அமெரிக்காவில் நடக்கும் பாஸ்டன் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 2-3 (4-11, 9-11, 11-6, 11-3, 5-11) என எகிப்தின் ஜனா ஸ்வைபையிடம் தோல்வியடைந்தார்.* ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடருக்கான சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக, முன்னாள் இந்திய வீரர் கிளிப்போர்டு மிராண்டா 43, நியமிக்கப்பட்டுள்ளார்.
13-Oct-2025