உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.14.80 லட்சம் இழப்பீடு

விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.14.80 லட்சம் இழப்பீடு

சென்னை:சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 27. தனியார் நிறுவன ஊழியரான இவர், 2017 ஜன., 14ல், மதுரவாயல் -- தாம்பரம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, முன்னால் சென்ற விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பேருந்து டிரைவர், திடீரென 'பிரேக்' பிடித்தார். இதில், ஸ்ரீதர் சென்ற வாகனம் மோதியது. பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இந்த நிலையில், 15 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், ஸ்ரீதர் வழக்கு தொடர்ந்தனர்.நீதிபதி அளித்த தீர்ப்பு:விபத்துக்கு, மனுதாரர், பேருந்து ஓட்டுனர் இரண்டு பேருமே பொறுப்பாவர். விபத்தில் பேருந்து ஓட்டுனருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, ஸ்ரீதருக்கு, 18.50 லட்சம் ரூபாய் இழப்பீடாக நிர்ணயிக்கப்படுகிறது. வழக்கில் மனுதாரரின் கவனக்குறைவாலும் விபத்து நடந்திருக்கிறது என்பதால், இழப்பீடு தொகையில் 20 சதவீதம், அதாவது 4 லட்சம் ரூபாய் கழிக்கப்படுகிறது.மீதமுள்ள தொகையான 14.80 லட்சம் ரூபாயை, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ