உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 98 கிலோ குட்கா பறிமுதல்

98 கிலோ குட்கா பறிமுதல்

திருநின்றவூர் : ஆவடி அடுத்த திருநின்றவூர், முருகேசன் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 33. இவர், திருநின்றவூர் காந்தி சிலை அருகே எஸ்.ஆர்.பி., ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக வந்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஸ்டோர் ரூமில் பதுக்கி வைத்திருந்த 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 98 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, ராஜேஷ்குமாரை கைது செய்த திருநின்றவூர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ