உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

சென்னை, சென்னை, மேடவாக்கம் அடுத்த நன்மங்கலம், அம்பேத்கர் சாலை, முத்தையா நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 22; தனியார் நிதி நிறுவன ஊழியர்.இவர், நேற்று காலை 7:00 மணியளவில், தன் அண்ணன் சோலைராஜனுடன் பஜாஜ் பல்சர் என்.எஸ்., ரக 'பைக்'கின் பின்னால் அமர்ந்து, ஈச்சங்காடு சந்திப்பு நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, சாலையில் கிடந்த கற்களால், 'பைக்' நிலை தடுமாறியது. இதில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆனந்தன், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது, பின்னால் வந்த கழிவுநீர் லாரி, ஆனந்தன் மீது ஏறியது. இதில் அவர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், ஆனந்தனின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்து, கழிவுநீர் லாரி ஓட்டுனர் முருகன், 51, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர். அண்ணன் கண் முன், தம்பி பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ