உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏசி பழுது ரயில் பயணியர் வாக்குவாதம்

ஏசி பழுது ரயில் பயணியர் வாக்குவாதம்

செங்கல்பட்டு:சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ராமேஸ்வரம் விரைவு ரயில், எழும்பூரில் மாலை புறப்பட்டது.ரயில் புறப்படும் போதே 'பி1' பெட்டியில் ஏசி வேலை செய்ய வில்லை. ஜன்னல்களையும் திறக்க முடியாததால், புழுக்கத்தில் பயணியர் கடும் அவதி அடைந்தனர்.செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இரவு 8:17 மணிக்கு வந்தபோது, ரயில்வே ஊழியர்களிடம், பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, 'ஏசி' பழுதை நீக்கினர். இதையடுத்து 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை