உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரையப்பாக்கம் ரயில்வே கேட் இன்று முதல் 3 நாட்கள் மூடல்

அரையப்பாக்கம் ரயில்வே கேட் இன்று முதல் 3 நாட்கள் மூடல்

மதுராந்தகம்' : மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் ரயில்வே கேட், தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில், அரையப்பாக்கம் பகுதியில், செங்கல்பட்டு - விழுப்புரம் மார்க்கத்தில் ரயில்வே தண்டவாளம் உள்ளது.அரைப்பாக்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இன்று, 23, 24ம் தேதி ஆகிய மூன்று நாட்கள், இரவு 8:00 மணி முதல் காலை 6:00 மணி வரை, ரயில்வே கேட் முழுதும் மூடப்படும்.பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்தவும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இதனால், மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில், கருங்குழி வழியாக கிணார், ஏர்பாக்கம் வழி சென்று, திருக்கழுக்குன்றம் சென்றடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி