உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சித்திரை வசந்த உற்சவம் முன்னேற்பாடுகள் தீவிரம்

சித்திரை வசந்த உற்சவம் முன்னேற்பாடுகள் தீவிரம்

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், சித்திரை மாத வசந்த உற்சவ விழாவையொட்டி, முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வசந்த உற்சவம், வரும் 19ம் தேதி துவங்கி, 23ம் தேதி நிறைவடைகிறது.விழா துவங்கும் நாளிலிருந்து, தொடர்ந்து ஐந்து நாட்கள் உற்சவ மூர்த்தியான கந்தசுவாமி, வள்ளி, தெய்வானையுடன், கோவிலுக்கு அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார்.அங்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறும். மீண்டும் இரவு 7:30 மணிக்கு, சுவாமி கோவிலை வந்தடைவார். இறுதி நாளில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.இவ்விழாவை முன்னிட்டு, வசந்த மண்டபத்தில் பந்தல் அமைத்தல், வளாக பகுதியை துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை