உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விபத்தில் கிரஷர் ஆப்பரேட்டர் பலி ரூ.36 லட்சம் இழப்பீடு

விபத்தில் கிரஷர் ஆப்பரேட்டர் பலி ரூ.36 லட்சம் இழப்பீடு

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் - வடலுார் சாலை நல்லம்பாக்கம் அருகே, கடந்த 2020 டிசம்பர் 12ம் தேதி, தனியார் குவாரி கிரஷர் ஆப்பரேட்டரான மணிகண்டன் என்பவர், தன் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.நல்லம்பாக்கம் கிரஷர் சாலை சந்திப்பு அருகே, அதே வழித்தடத்தில் சென்ற மினி லாரி, மணிகண்டன் இரு சக்கர வாகனம் மீது மோதியது.பலத்த காயம் அடைந்த மணிகண்டன்,சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார்.மணிகண்டனின் இறப்புக்கு 45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், அவரது மனைவி மகாலட்சுமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் நடந்தது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'இரு சக்கரவாகனத்தில், அதிவேகமாக வந்து லாரி மீதுஉயிரிழந்த நபர் மோதியுள்ளார் என்ற வாதம் ஏற்புடையது அல்ல.அதிவேகம், அஜாக்கிரதையாக, லாரியை டிரைவர் இயக்கியதே, விபத்துக்கு பிரதான காரணம்.எனவே, மனுதாரர்களுக்கு 36.02 லட்சம் ரூபாய் இழப்பீடாக, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி யுடன், தி ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்