உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாவட்ட செஸ் போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

மாவட்ட செஸ் போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

மறைமலை நகர் : லோட்டஸ் செஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான ஒரு நாள் செஸ் போட்டி, வரும் 14ம் தேதி செங்கல்பட்டில் உள்ள வித்யாசாகர் குளோபல் பள்ளியில் நடைபெற உள்ளது.பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டியில், 16 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். போட்டிகளில் பங்கேற்று, முதல் 15 இடங்களில் வெற்றி பெறும் மாணவ -- மாணவியருக்கு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு, https://Easypaychess.comமற்றும் https://Chessentry.inஆகிய இணைய தளங்களிலும், 80502 85077, 99405 67200 மற்றும் 99400 58265 ஆகிய மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை