உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செக் மோசடி சத்துணவு ஊழியர் கைது 

செக் மோசடி சத்துணவு ஊழியர் கைது 

மறைமலைநகர்:மறைமலை நகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி, 50; அரசு ஒப்பந்ததாரர். இவரிடம், செங்கல்பட்டில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வரும் கலா, 42, என்ற பெண், குடும்ப செலவிற்காகவும், தன் மருமகன் குறும்படம் எடுக்கவும் 21.73 லட்சம் ரூபாய் கடனாக பெற்று உள்ளார்.பல மாதங்களாக பணத்தை திரும்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும், போலி வங்கி கணக்கு காசோலை கொடுத்து பார்த்தசாரதியை ஏமாற்றி உள்ளார். இது குறித்து விசாரித்த போலீசார், கலாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி