மேலும் செய்திகள்
சென்னையில் ரவுடி கொலை
27-Feb-2025
சென்னை, அயானாவரத்தில் வீடு புகுந்து பெண்ணை வெட்டியதோடு, அண்ணா நகரில் ரவுடியை கொலை செய்து தப்பிய கும்பல், சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட தகவல் அம்பலமாகியுள்ளது.கிழக்கு அண்ணா நகர், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ராபர்ட், 28. இவரை, நேற்று முன்தினம் மாலை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.அதேகும்பல், சில மணிநேரத்திற்கு முன், அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பில், 17 வயது சிறுவனை தேடி சென்றுள்ளது. வீட்டில் சிறுவன் இல்லாதால், அவரது தாய் ரேவதியை, 32 வெட்டிவிட்டு தப்பினர்.அவர், தலையில் 10 தையல்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். முன் விரோதம் காரணமாக, 2019ல் ராபர்ட் கூட்டாளி கோகுலை, லோகு கும்பல் கொலை செய்தது.இது தொடர்பாக, ராபர்ட், லோகு இடையே மோதல் இருந்தது வந்தது. லோகுவின் செயல்பாடுகள் குறித்து, ரேவதியின் 17 வயது மகன், போலீசுக்கு தகவல் கொடுத்து வந்துள்ளார். இதனால் ராபர்ட், ரேவதியின் மகன் என இருவரையும் ஒரே நேரத்தில் தீர்த்து கட்ட திட்டமிட்டது தெரிய வந்தது.இந்நிலையில், கொலையில் தொடர்புடையோர் பகையை தீர்த்த சந்தோஷத்தில், கூட்டாளிகளுடன் சேர்ந்து, இன்ஸ்டாகிராமில் படத்துடன் வீடியோ வெளியிட்டு கொண்டாட்டம் நடத்தினர். இது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொலை செய்யப்பட்ட ராபர்ட்டின் கூட்டாளிகள், எதிரிகள் மீது தாக்குதல் நடக்கூடும் என்பதால், இரு தரப்பையும் போலீசார் தேடி வருகின்றனர்.
27-Feb-2025