உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தமிழ் செம்மல் விருது விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ் செம்மல் விருது விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு,:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வழங்கும், தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறையின், https;//tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்கள், காஞ்சிபுரம் வட்டாட்சியர் வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு, ஆக., 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை