உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையோரம் குப்பை எரிப்பு நெரும்பூர் மக்கள் பாதிப்பு

சாலையோரம் குப்பை எரிப்பு நெரும்பூர் மக்கள் பாதிப்பு

நெரும்பூர்:திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூரில், வாயலுார் சாலை உள்ளது. இப்பகுதியில், ஊராட்சி துாய்மைப் பணியாளர்கள், தினமும் சாலையோரத்தில், சருகு, குப்பையை தீயிட்டு எரிக்கின்றனர். அதனால் ஏற்படும் புகை சாலை முழுதும் பரவுகிறது.அங்குள்ள வீடுகள், கடைகள், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவற்றில், புகை பரவுகிறது. அவ்வழியே செல்லும் மக்கள், புகையை சுவாசித்து, மூச்சுத் திணறி அவதிக்குள்ளாகின்றனர். குப்பை எரிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை