உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரேஷன் கார்டு திருத்த முகாம்

ரேஷன் கார்டு திருத்த முகாம்

ரேஷன் கார்டு திருத்த முகாம் செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாம், நேற்று நடந்தது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புகைப்படம் திருத்தம் என, 202 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டதாக, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ