உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரேஷன் கார்டு திருத்தம் இன்று சிறப்பு முகாம்

ரேஷன் கார்டு திருத்தம் இன்று சிறப்பு முகாம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு தாலுகாக்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்ற திருத்தங்கள் செய்ய, இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம், அந்தந்த தாலுகாக்களில் நடக்கிறது.கீழ்கண்ட கிராமங்களில், சிறப்பு குறை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதில், தகுந்த ஆவணங்கள் கொடுத்து, தங்களது ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், இந்த முகாமில் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாலுகா கிராமம்

செங்கல்பட்டு பழவேலிமதுராந்தகம் ஓணம்பாக்கம்செய்யூர் வில்லிப்பாக்கம்திருக்கழுக்குன்றம் விளாகம்திருப்போரூர் கரும்பாக்கம்வண்டலுார் புத்துார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ