உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வட்டார அளவிலான கபடி போட்டி கடப்பாக்கம் மாணவியர் அசத்தல்

வட்டார அளவிலான கபடி போட்டி கடப்பாக்கம் மாணவியர் அசத்தல்

செய்யூர், : அச்சிறுப்பாக்கம் கல்வி வட்டாரத்திற்கு உட்பட்ட கடப்பாக்கம் செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில், பாரதியார் பிறந்த நாள் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவியருக்கு வட்டார அளவிலான கபடி போட்டி நடந்தது.இதில், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என, மொத்தம் 21 பள்ளிகளைச் சேர்ந்த மாணவியர் பங்கேற்றனர்.நாக் அவுட் முறையில் நடந்த போட்டியில், யு - 14 வயது பிரிவு இறுதிப் போட்டியில், கடப்பாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், கடுக்கலுார் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியரை வீழ்த்தினர்.யு - 17 வயது பிரிவு இறுதிப் போட்டியில், கடப்பாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், அச்சிறுபாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரை வீழ்த்தினர்.யு - 19 வயது பிரிவு இறுதிப் போட்டியில், கயப்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவியரை வீழ்த்தி, கடப்பாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் வெற்றி பெற்றனர்.அனைத்து வயது பிரிவு கபடி போட்டிகளிலும், கடப்பாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் வெற்றி பெற்று அசத்தினர். வெற்றி பெற்ற மாணவியர், அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை