உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலத்தில் தடுப்பு கம்பி அமைக்க வேண்டுகோள்

பாலத்தில் தடுப்பு கம்பி அமைக்க வேண்டுகோள்

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அடுத்த திம்மாபுரத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து, கலங்கல் வழியாக உபரி நீர் செல்லும் கால்வாய் நெடுஞ்சாலையை கடந்து செல்கிறது.இதில், கால்வாய் மீது பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மீது, இரும்பு தடுப்பு கம்பிகள் மற்றும் சிமென்ட் கான்கிரீட் கட்டைகள் இன்றி, திறந்தவெளியில் உள்ளது. இந்த சாலையை, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.சாலை வளைவில் வரும்போது, பாலத்தில் தடுப்புகள் இல்லாததால், எதிரே வாகனங்கள் ஒதுங்கி நிற்க முடியவில்லை. மேலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பாலத்தில் தடுப்புகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை