உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாம்பரம் மாநகராட்சி கூட்டம்; கேள்வி எழுப்ப அ.தி.மு.க., முடிவு

தாம்பரம் மாநகராட்சி கூட்டம்; கேள்வி எழுப்ப அ.தி.மு.க., முடிவு

தாம்பரம் : தாம்பரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை நடக்கிறது. இதில், மேயரின் செயல்பாடுகள் குறித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சி கூட்டம், கடந்த பிப்., 29ம் தேதி நடந்தது. அதன் பின், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால், மாநகராட்சி கூட்டத்தை நடத்த முடியவில்லை. தேர்தல் முடிந்த பிறகும் நடத்தாததால், ஐந்து மண்டலங்களிலும் சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.இந்நிலையில், மாநகராட்சி கூட்டம் இன்று காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. ஐந்து மண்டலங்களிலும், இரண்டரை ஆண்டுகளாக மக்கள் பணிகள் முறையாக நடக்கவில்லை. தி.மு.க., அரசு மீது, மக்கள் வெறுப்பில் உள்ளனர். மேயரின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. அவர், மக்கள் பணியில் அக்கறை காட்டுவதே இல்லை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, இக்கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து, கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ