உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டெலிகிராம் டாஸ்க் ரூ.1.81 லட்சம் ஆட்டை

டெலிகிராம் டாஸ்க் ரூ.1.81 லட்சம் ஆட்டை

சென்னை:சென்னை, அண்ணா நகர் மேற்கு வசந்தம் காலனியைச் சேர்ந்தவர் அபிநந்தன் ஜெயின், 26; தனியார் நிறுவன ஊழியர்.இவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கு, 'டெலிகிராம்' செயலியில் இணைப்பு ஒன்று வந்துள்ளது.அதில் 'ஆன்லைன்' தளத்தில்,'டாஸ்க்' ஒன்றை செய்து முடித்தால் லாபம் கிடைக்கும் என விளம்பரம் வந்துள்ளது. அதை நம்பி, முதலில் 50 ரூபாய் செலுத்திய அபிநந்தனுக்கு, 150 ரூபாய் கிடைத்துள்ளது.பின், 2,000 ரூபாய் செலுத்திய போது, 2,800 ரூபாயாக கிடைத்துள்ளது. இதேபோல் அபிநந்தன், 1 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார்.அதன் பின் அபிநந்தனுக்கு எதிர் தரப்பிலிருந்து பணமும் கிடைக்காமல், தகவலும் இல்லாமல் இருந்துள்ளது. இது குறித்து கேட்ட போது, நிறுவனம் நஷ்டத்தில் சென்றதாகக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளனர்.அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி