உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் காவல் எல்லைக்குட்பட்ட பாதிரி கிராமத்தில், வசித்து வருபவர் மல்லிகா, 65. நேற்று முன்தினம், இவரது மகன், மருமகள் ஆகியோர் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்றனர்.அதனால், வீட்டில் தனியாக இருக்க அச்சப்பட்ட மல்லிகா, அதே தெருவில் உள்ள தன் சகோதரி வீட்டில் நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்றார்.பின், நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 18 சவரன் தங்க நகை மற்றும் 20,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்மருவத்துார் போலீசார், திருடு போன வீட்டில், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.பின், நேற்று மல்லிகா அளித்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்த போலீசார், திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி