உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் ரயில்வே கேட்டில் தொடரும் நெரிசல்

எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் ரயில்வே கேட்டில் தொடரும் நெரிசல்

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையை, சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு ஆட்கள் ஏற்றி செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.இந்த சாலையில், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில், இருபுறமும் எதிர் திசையில் தனியார் தொழிற்சாலை பேருந்துகள், வழியை மறித்து செல்கின்றன.முதலில் செல்ல வேண்டும் என, போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துவதால், எதிர் திசையில் வாகனங்கள் செல்வதில் தடை ஏற்பட்டு, இருபுறமும் தினமும் 1 கி.மீ., துாரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நேரங்களில், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்களும் நெரிசலில் சிக்குகின்றன. எனவே, இந்த பகுதியில் வீதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்