உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல்

லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல்

கூடுவாஞ்சேரி நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நெல்லிக்குப்பம் பிரதான சாலை அருகே, கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. பதிவாளராக வைத்தியலிங்கம் உள்ளார்.இவர், நேற்று அலுவலகம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு சென்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை துணை எஸ்.பி., சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர், கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.மாலை 5:00 மணிக்கு துவங்கிய சோதனை, இரவு வரை நீடித்தது. இடம் மற்றும் வீடு தொடர்பாக பதிவு செய்ய வந்தவர்களை சோதனை செய்தே வெளியே அனுப்பினர்.ஆய்வுக்கு பின் அதிகாரிகளிடம் கேட்டபோது, “சோதனையில் கணக்கில் வராத 4.26 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பொறுப்பு சார் - பதிவாளர் ஆனந்தமுத்து, 45,விடம் விசாரித்து வருகிறோம்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை