/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு:புகார் பெட்டி;நீலமங்கலம் சாலை ஓரத்தில் மண் அணைக்க கோரிக்கை
செங்கல்பட்டு:புகார் பெட்டி;நீலமங்கலம் சாலை ஓரத்தில் மண் அணைக்க கோரிக்கை
நீலமங்கலம் சாலை ஓரத்தில் மண் அணைக்க கோரிக்கை
பவுஞ்சூர் அருகே தச்சூர் கூட்டு சாலையில் இருந்து, நீலமங்கலம் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை உள்ளது. தினசரி, ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் கடந்து செல்கின்றன.சாலை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, பள்ளம் உருவாகி உள்ளதால், இரவு நேரத்தில் சாலை ஓரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.ஆகையால், அதிகாரிகள் சாலை ஓரத்தில் மண் அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ர.நரேஷ்குமார்,பவுஞ்சூர்.