உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருட்டு பைக்கில் சுற்றிவரும் ஜோடி உரிமையாளரை கண்டதும் எஸ்கேப்

திருட்டு பைக்கில் சுற்றிவரும் ஜோடி உரிமையாளரை கண்டதும் எஸ்கேப்

செங்கல்பட்டு:விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருசேவ்,30. செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டியில் தங்கி, அதே பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 4ம் தேதி தன்,'ராயல் என்பீல்டு ஹிமாலயா' இருசக்கர வாகனத்தை, செங்கல்பட்டு ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு, ரயில் வாயிலாக சொந்த ஊருக்குச் சென்றார்.கடந்த 10ம் தேதி மீண்டும் வந்து பார்த்த, இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து குருசேவ், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம், குருசேவ் தன் நண்பருடன் செங்கல்பட்டு பழைய ஜி.எஸ்.டி., சாலையில் சென்றுள்ளார். அப்போது, திருடப்பட்ட தன் ராயல் என்பீல்டு பைக்கில் இளைஞரும் இளம்பெண் ஒருவரும் முன்னால் சென்றுள்ளனர்.அவர்களை மடக்கி, பைக் குறித்து கேட்ட போது, இவர்களை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்று உள்ளனர். இதை மொபைல்போனில் வீடியோ எடுத்த குருசேவ், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், திருடப்பட்ட இருசக்கர வாகனம் அதே பகுதியில் சுதந்திரமாக சுற்றி வருவது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி